Tuesday, 23 June 2020

கல்வான் - இந்திய ராணுவத்தின் பதிலடி

இதன் உண்மைத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை.  ஆனால் நமது ராணுவ பதிலடி கொடுத்தது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்திய ராணுவம் ஆக்ரோஷமாக துணிந்து தாக்குகிறது.  பதினோரு மணிவரை நடந்த இந்த சண்டையில் இரு பக்கமும் பலத்த சேதம்.  கர்னல் பாபுவின் சடலத்தையும் மற்றும் வீரமரணமடைந்த வீரர்களின் சடலத்தையும் தூக்கிக் கொண்டு இந்திய ராணுவம் தனது கூடாரத்திற்கு செல்கிறது.

கர்னல் பாபு தாக்கப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சிப்பிழம்பில் இருந்தனர் பீகார் ரெஜிமென்ட் வீரர்கள்.  

10-12 பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாக பிரிந்தனர்.  சீன எல்லைக்குள் இரண்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் வரை உள்ளே ஊடுருவிச் சென்றனர்.  அப்போது நடந்தது தான் மிகவும் ஆக்ரோஷமான சண்டை.  திடீரென்று இந்திய ராணுவத்தின்  கட்டக் வீரர்களும் (Ghatak platoons) இணைகிறார்கள்.  கட்டக் வீரர்கள் அதிபயங்கரமாக சண்டையிட கூடியவர்கள். இரண்டு குழுக்களும் இணைந்து நடத்திய தாக்குதல் ராணுவ வரலாற்றிலேயே மிகவும் பயங்கரமானது என்று செய்தியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (The jawans of 16 Bihar were reportedly joined by the 'Ghatak' troops. Together, they "unleashed a reign of terror, unheard in modern military history", the report said)

சீன எல்லையின் உள்ளே இரண்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரையில் பல இடங்களில் சண்டை நடந்தது.  இது ஒருவகையான தற்கொலைப்படை தாக்குதல் என்றுதான் சொல்லவேண்டும்.  சீன ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துகொண்டே இருந்தனர்.  இருந்தாலும் இந்திய வீரர்கள் தாக்குதலை நிறுத்தவே இல்லை.  

பீகார் ரெஜிமென்ட் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தனியாளாக சண்டையிட்டு 30 சீனர்களை கொன்றதாக செய்திகள் கூறுகின்றன.  5 மணி நேரத்திற்கு மேல் இந்த சண்டை நீடித்தது.  மறுநாள் காலையில் சீனர்கள் இறந்தவர்களை பார்த்தபோது கதி கலங்கி நின்றனர்.

இந்திய ராணுவ வீரர்களின் தாக்குதல் அதிபயங்கரமாக இருந்ததால் பல சீன வீரர்களின் முகம் கூட தெரியாத அளவுக்கு உருக்குலைந்து இருந்தது; பலரது கழுத்து தனியாக தொங்கிக்கொண்டிருந்தது.  சொல்ல முடியாத அளவுக்கு பயங்கரமான தாக்குதல்.  குறைந்தபட்சம் 150-200 சீனர்கள் இறந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  மருத்துவமனையில் பலரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.  

பீகார் ரெஜிமென்ட் நடத்திய மினி சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் பலியான சீனர்களின் எண்ணிக்கை 300க்கும் மேலே கூட இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அருகிலிருந்து பார்த்த சீன ராணுவ வீரன் ஒருவன் கூறினான், "எனக்கு பீகார் எங்கிருக்கிறது என்று தெரியாது; ஆனால் நான் இனிமேல் ராணுவத்தில் இருக்க மாட்டேன்" .

கர்னல் பாபு தாக்கப்பட்டதை கேட்டவுடன், பீகார் ரெஜிமென்டுக்கு, சீன எல்லைக்குள் நுழைந்து பதில்தாக்குதல் நடந்த வேண்டும் என்ற உத்தரவு, தில்லியிலிருந்து வந்ததாக தெரிகிறது.  

"இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் ..." என்று பாரதப் பிரதமர் மோடி அறிக்கை விடுகிறார்.  
வேறு யார் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ சீன ராணுவம் நன்கு புரிந்து கொண்டது.

கர்னல் சந்தோஷ் பாபுவின் மரணத்திற்கு பலியாக பலநூறு உயிர்களை எடுத்ததால் பீகார் ரெஜிமென்ட் வீரர்களின் கோபம் தணிந்துள்ளது.

ஆக்ரோஷமான தாக்குதலை நேரில் கண்ட சீனர்கள் கதி கலங்கிப் போய் அமைதியாக இருக்கிறார்கள்.

இப்போது எல்லையில் அமைதி.  மயான அமைதி.
இந்த உண்மை புரியாமல் இந்தியாவிற்குள் இருந்து கொண்டே இந்தியாவிற்கு எதிராகவும், இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராகவும் பேசும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது ???

- பத்மநாபன் நாகராஜன்

No comments:

Post a Comment

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...