Monday, 21 November 2022

முலைவரி கதை உருவான விதம்

💥முலைவரி கதை உருவான விதம்

💙திருவாங்கூர் சமஸ்தானம் பெண்களின் மார்புக்கு முலைவரி போட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நங்கேலி என்ற பெண் தன் மார்பை அறுத்துக் கொண்டு   இறந்து போனாள் என்றும்... அவள் இறந்த இடம் ஆலப்புழாவில் உள்ள முலைச்சி பறம்பு என்று அழைக்கப்படுவதாகவும் பல காலமாக மிஷனரிகள் புரட்டு.
👉(முலைவரி போட்ட ஆவணம், முலைவரி கட்டிய ரசீது என்று எந்த ஆதாரமும் இல்லை என்பது வேறு விஷயம்)
 
👉சரி.... உண்மை என்ன.....?

❤️கோவலன் இறந்த துயரத்தில், கண்ணகி தன் இடதுபுற மார்பை அறுத்துப்போட்டு  மதுரையை சபித்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
______________________________________
ஏகிலாள் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி (216:8,9) என்று கண்ணகியை நற்றிணை குறிப்பிடுகிறது .
 ______________________________________
💙கண்ணகியை ஒற்றை முலையுடன், திருச்செங்குன்றம் குரவர்கள் கண்டு, சேரன் செங்குட்டுவனிடம் சொன்னதால், "ஒற்றை முலைச்சி" என்ற பெயரிலேயே கேரளத்தில் பல இடங்களில் மலைவாழ், பழங்குடி மக்கள் கண்ணகிக்கு பல கோவில்கள் கட்டி வணங்கினர்.

💜மலைவாழ், பழங்குடி மக்களை குறிவைத்து மதமாற்றத்தில் ஈடுபட்ட மிஷனரிகளுக்கு இந்த கோவில்கள் இடையூறாக தெரியவே, வரலாற்றை திரித்து, ஒற்றை முலைச்சி கோவில்களை அவமான சின்னங்களாக மாற்ற செய்த சூழ்ச்சியே நங்கேலி கதை.
 
💜முதலில் கட்டப்பட்ட கதை...  ஒரு தாழ்த்தப்பட்ட சமூக பெண் மேலாடை அணிந்ததால், கோபமுற்ற திருவாங்கூர் சமஸ்தான ராணி ஒருவர் அந்த பெண்ணின் ஒரு மார்பை அறுத்துவிட்டார். அந்த பெண்ணின் பெயர் "நாஞ்சிலி".  அவர் தான் இந்த "ஒற்றை முலைச்சி" என்று கதை புனையப்பட்டது.  
👉"நாஞ்சிலி" என்றால் கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் நாட்டு பெண் என்று பொருள். இந்த கதை திருவாங்கூர் மிஷனரிகளால் அவிழ்த்து விடப்பட்டது. ஆனால் திருவாங்கூர் அரச குடும்பத்தின் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்த கேரள மக்கள்  இந்த கதையை  ஏற்றுக்கொள்ளவில்லை.  

❤️பின்பு..... அந்த கதை மாற்றி எழுதப்பட்டு, திருநெல்வேலி மிஷனரிகளால் தமிழர்களிடம் அவிழ்த்து விடப்பட்டது. அந்த புது கதை...  திருவாங்கூர் மன்னர் ஒருவர் பெண்களின் மார்புக்கு வரி விதித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பெண் மார்பை அறுத்துக் கொண்டாள் என்பது. அந்த பெண் இறந்த இடம் தான் முலைச்சி பறம்பு என்றார்கள்.  
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥முலைச்சி பறம்பு என்றால் என்ன?
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥வில்வமங்கலம் சாமியார்... பத்மநாப சுவாமியை தரிசித்துவிட்டு வரும் வழியில்,  7 பெண்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதைக் கண்டதாகவும்... அதில் ஒரு பெண், தவறி சேற்றில் விழுந்து சேறு பூசிய தலையுடன் வர... அந்த பெண் கார்த்தியாயணி தேவி  என்று அவர் உணர்ந்து கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது. அதனால் அந்த இடம், "சேர்தலை  முலைச்சி பறம்பு" (சேரு பூசிய தலையை உடைய பெண்ணின் நிலம்; முலைச்சி என்றால் பெண்) என்று வழங்கப்பட்டது.
மிஷனரிகள் முலைச்சி பறம்பு என்பது முலைஅறுத்த பெண்ணின் ஊர் என்று கதையை மாற்றினர்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
ஆனால் அந்த முலை அறுத்த பெண்ணுக்கு முதலில் அவர்கள் வைத்திருந்த பெயரோ "நாஞ்சிலி". ஆலப்புழா மாவட்டம் "சேர்தலை முலைச்சி பறம்பில்", எப்படி கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாட்டு நாஞ்சிலியை நுழைக்க முடியும்? எனவே  "நாஞ்சிலியை"... "நங்கேலி" ஆக்கினர். 
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
💙கேரள மக்களிடம் கன்னியாகுமரியில் நடந்ததாகவும், தமிழக மக்களிடம் ஆலப்புழாவில் நடந்ததாகவும் கூறப்பட்ட கதை இது.

❤️சரி...நங்கேலிக்கு எப்படி உருவம் கொடுப்பது?🙄
👉கண்ணகி சிலை சில இடங்களில் கையில் சிலம்புடனும்,  சில இடங்களில் கையில் அறுத்த ஒரு முலையுடனும் காணப்படும். 

❤️நம்ம மிஷனரிகள் இந்த இரண்டையும் இணைத்து..., ஒரு கையில் சிலம்புக்கு பதில் அரிவாளை கொடுத்து, மறு கையில் அறுத்த ஒரு முலையை கொடுத்து ஒரு உருவத்தை வடிவமைத்தனர். 

💥ஆனால் இந்த கதையை வைத்துக்கொண்டு "ஒற்றை முலைச்சி"  கோவில்களை, நங்கேலி கோவில்களாக அவர்களால் மாற்ற முடியவில்லை. ஏனெனில் ஒற்றை முலைச்சி கோவில்கள் எல்லாம் பகவதி அம்மன் கோவில்களாக மாறின.

💙ஆயினும் நங்கேலி கதை  மதமாற்ற-மிஷனரிகளால் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
இந்த நங்கேலி 1803ல் இறந்தாகவும், மறுநாளே முலைவரி நீக்கப்பட்டதாகவும் சமீபத்திய மிஷனரிகள் புரட்டு.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
💙1803ல் திருவாங்கூரை ஆண்ட ராஜா 16 வயது சிறுவன் பாலவர்மா குலசேகர பெருமாள்.  இவரை பொம்மை அரசராக வைத்துவிட்டு 11 ஆண்டுகள் ஊழல், கொடுங்கோல்  ஆட்சி செய்து வரிப்பணத்தில் பெரும் பங்கை சுருட்டியவர் வெள்ளைக்கார ஜெனரல் கொலின் மெக்காலே.

💥இதை எதிர்த்து குரல் எழுப்பிய ஜெயந்தன் சங்கரன், மட்து தரக்கன், சங்கர நாராயணன் ஆகிய 3 அமைச்சர்கள் பொய் குற்றம் சாட்டப்பட்டு பொது இடத்தில் சவுக்கால் அடித்து, காதுகள் அறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 

💥மெக்காலேவின் ஊழலை தட்டிக்கேட்ட அமைச்சர் குஞ்சுநிலம் பிள்ளை, பொய் கொலை குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டார். 

💥மெக்காலேவின் ஊழலை  வெளிப்படுத்திய செண்பகராமன் பிள்ளை, எராயிமான் பிள்ளை என்ற இரண்டு முன்னாள் திவான் கேசவதாஸின் உறவினர்களும் பொய் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டனர். 

💥கொலின் மெக்காலேவால்  நியமிக்கப்பட்டு, அவருடைய ஊழலுக்கு உடந்தையாக இருந்த திவான் வேலுத்தம்பியே மெக்காலேவின் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல், ஒரு கட்டத்தில் மெக்காலேவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக  கிளர்ந்தெழுந்ததால், 1809ல் அவரும் கொல்லப்பட்டார்.

💥மெக்காலேவின் அட்டகாசத்தை பிரிட்டிஷ் தலைமைக்கு தெரியப்படுத்திய ராஜா பாலவர்மாவும் 1810ல் கொல்லப்பட்டார்

😞ஊழல் பணத்தை மதமாற்றத்துக்கு அள்ளிக் கொடுத்தும், மதமாறியவர்களுக்கு மட்டும் வரிச்சலுகையும், ஞாயிறு விடுமுறையும் கொடுத்து, இந்துக்கள் கோவில் திருவிழா கொண்டாடக் கூட திருவிழா வரி போட்ட  இந்த கொலின் மெக்காலேவை தான் மிஷனரிகள் சீர்திருத்தவாதி என்று கொண்டாடுகின்றனர்.

Saturday, 12 November 2022

அஜினோமோட்டோ

அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?

அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?

அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...!

பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்...

அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று...

ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?

அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...

அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது..

உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,

இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு, கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,

அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்.

முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர் தரமானதாக இருந்தது.

ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்து, வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும், அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..

Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரியமாகும்..

ஒரு முறை உண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..

முதலில் இந்த glutamate ஐ உபயோகித்து, Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர்.

பிறகு இதன் அபாயமறிந்து, அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர் ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.

இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில், தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை, பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்..

சாலையோர கடைகள் தொடங்கி, மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும், இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..

முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான், அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய், தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்..

அது நாம் விரும்பியும், விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது, குறிப்பாக குழந்தைகள்...

அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ், கிரீம் பிஸ்கட், சாதாரண பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன், சிக்கன்,ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,

உண்பதால் வரும் பக்க விளைவுகள்:-

1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி

2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால், அதிகமான பசி எடுக்கிறது.

நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால், தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.

3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.

4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும்.

5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சில நேரம் வலியும் உருவாக்கும்.

6. முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும்,  சிலரது முகம் கருத்திருக்கும்.

7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பியால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.

8. இவை எல்லாம் ஒரு நாள், நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..
 அஜினோமோட்டோவை தவிர்ப்போம்.

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...