Friday, 14 August 2020

மாவேள் அமைப்பு

வணக்கம், படித்து பகிர்ந்து மாற்றத்தை நிகழ்த்துவோம். 

                    சீமை கருவேல மரங்களை சீரமைக்கவும், அதற்கு மாற்றாக மஞ்சனத்தி காடுகள் உருவாக்க வேண்டும் என்றும் , இருக்கும் மரங்கள் பாதுகாக்கவும் அதன் காய்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கியுள்ளது #மாவேள் நிறுவனம்.

மஞ்சனத்கி எனும் நுணா காய்களை கொள்முதல் செய்யப்படும் என்று தகவல் வெளியானதும் பலரும் அழைத்து விவரம் கேட்கின்றார்கள். ஆனால் தற்போதைய சூழலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருப்பவர்களால் மட்டுமே நேரடியாக கொண்டுவர முடிகிறது. அஞ்சல் மூலமாக அனுப்பினால் வந்து சேர்வதற்குள் வீணாகிவிடும் வாய்ப்பு உண்டு. அதனால் பிற மாவட்ட மக்கள் எவ்வாறு அனுப்புவது என்ற தகவல் கீழே கொடுக்கின்றோம்.

1. மரத்திலிருந்து முற்றிய காய்களை மட்டும் பறிக்கவும் 
2. நன்றாக தண்ணீரில் அலசவும் 
3. அலசிய தண்ணீர் காயும் வரை மட்டும் வெயில்படுமாறு காய வைக்கவும். 
4. நிழலான இடத்தில் சுத்தமான விரிப்பு ஏதேனும் விரித்து அதில் ஒன்றோடு ஒன்று மேலே இல்லாமல் தனித்தனியாக விரித்து காயப்போடவும். 
5. கருமை நிறத்தில் நன்றாக பழுத்துவிடும்
6. பழத்தினை ஒரு பாத்திரத்தில் வைத்து கரண்டி , பருப்பு கடைய பயன்படுத்தும் பருப்பு மத்து வைத்து அழுத்தி கூழ்போல ஆக்கவும். நீர் ஊற்றக்கூடாது. விதைகள் பாதிக்காத அளவிற்கு பொறுமையாக செய்யவும்.
7. நன்றாக  பிசைந்த கூழினை வடகம் காயப்போடுவதுபோல துணி விரித்து அல்லது அகன்ற பாத்திரத்தில் ஒரு சென்டிமீட்டர் தடிமன் உள்ள உயரத்தில் சமனாக தட்டி காயவிடவும்.3 நாட்கள் வெயில் படுமாறு வைத்துவிட்டு ஈரம் உலர்ந்த அளவு காய்ந்தவுடன் நிழலான இடத்திற்கு மாற்றவும். நிழல் காய்ச்சலில் ஒருவாரம் காயவிடவும்.
8. நூறு விழுக்காடு நன்றாக காய்ந்தது என்ற நிலையில் அதை கையால் உடைத்து பார்க்கவும். உள்ளே ஈரப்பதம் எதுவும் இல்லை என்று உறுதியான பின்னே அதை பார்சலாக எங்களுக்கு அனுப்பவும். 
9. முறையாக காய்ந்து , விதைகள் பாதிப்பில்லாமல் இருந்தால் முழு தரமாக கருதப்படும். தரம் குறைவாக இருந்தால் அவை உணவு பயன்பாட்டுக்கு இல்லாமல் வெளிப்புற பயன்பாட்டுக்கே செல்லும். எனவே விலையும் குறைய வாய்ப்பு உள்ளது. 
10. இன்றைய கொள்முதல் விலை ரூ.200 முதல் ரூ .400 வரை உள்ளது.

குறிப்பு : காயும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அதைனை வாட்சப் மூலம் புகைப்படம் எடுத்து எத்தனை கிலோ காயபோடுகின்றோம் என்ற தகவல் கொடுக்க வேண்டும்.
 
பழத்தினை பிசையும் நபர் நன்றாக கை முழுவதும் கழுவிவிட்டு பிளாஸ்டிக் கவரால் கைக்கு உரையாக மாட்டிக்கொண்டு அதனையும் வாட்சப் எண்ணிற்கு புகைப்படம் அனுப்ப வேண்டும். பிசையும் நபர் முடி விழுந்துவிடாமல் தலைப்பாகை அல்லது பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த வேண்டும். பழம் காயும் இடத்தில் அசைவ பொருட்கள் , நச்சுப்பொருட்கள், வாசனை திரவிய பொருட்கள் இருக்கக்கூடாது. சிறப்பாக தயாரிப்பில் இருப்பவர் அந்த பகுதி முகவராக நியமனம் செய்யப்பட்டு கொள்முதல் உரிமை வழங்கப்படும்.

- MAAVEL FOODS AND AGRO PRODUCTS PVT LTD, Sathak Complex, Busstand Opp, Mudukulathur, Ramanathapuram Dt, TN.
Only WhatsApp / Telegram : 9688660235

No comments:

Post a Comment

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...